Saturday, December 29, 2018

விடியலை வெறுக்கும் பனிப்போர்வை....

வெளிச்ச கீறல்களற்ற
விடிந்திடா பொழுதுகள்....
விடிந்ததாய் பறக்கும்
கிண்ணரக்கூட்டங்கள்.....

விடியலை வெறுக்கும்
பனிப்போர்வை....
கதகதப்பாய் இழுத்து போர்த்திய
இதமான போர்வை போராட்டம்
எத்தனை இதமானது
இந்தமார்கழி......

நெஞ்சுக்குள் விண்ணப்பமின்றி
எப்பொழுது வந்தமர்ந்தாய்......
சில்லிட்ட மழைச்சாரலாய்
வெப்பம் தணிக்கும் இளவேனில் பறவையாய்....

இதயத்தைப் பிளந்து
இடி இடியாய் இடிப்பவளே .....
உனது வரவு மழையாய்
எனது மகிழ்வு மண்ணாய்.....

யுக யுகமாய் எனக்கு
உறவெனநீ வேண்டா....
ஒரு நொடிப்பொழுது
உன் பார்வை போதும்...

வெண்ணிற மலர்களுக்கு
அந்தி மாலை விடுதலை
அடுத்திருக்கும் மலர்களுக்கு
அதிகாலைதானே விடுதலை....

தாழம்பூ நான்
மின்னலாய் வெட்டித்தொலை....
மலர்ந்து கொள்ளட்டும் இந்த தாழம்பூவும்....





Saturday, December 22, 2018

அழகைத் தேடும் கண்களுக்கு

அழகைத் தேடும் கண்களுக்கு
அன்பு தெரிவதில்லை..

அன்பைத் தேடும் கண்களுக்கு
அழகு தேவையில்லை..


இறுதிவரை


இறுதிவரை
உன் மூச்சுக்காற்றை மட்டுமே
சுவாசித்து வாழ்ந்திட வேண்டும்..
உன் மூச்சு நின்ற அடுத்த கணமே
என் உயிரும் எனை விட்டுப்
பிரிந்திட வேண்டும்..!


வசந்த காலம்

முதல் பார்வை
முடிவுறா தேடல்
கடந்திடும் இரவுகள்
விடிந்திடும் பொழுதுகள்

மார்கழிப் பனி.....
நெஞ்சு உதறும் குளிர்
யோசிப்பின் உச்சம்..
நீயிருந்ததால் நிலைமை மோசம்

விடுதலை வேண்டிவிரல்கள்.....
வெந்நீர் வேண்டி நாக்கு....
ஆக்சிஜன் கேட்டு இதயம்...
திறக்க இயலா விழிகள்.....

முல்லைப் பூ நாசி
மல்லிகையின் மணம்
சந்தனக் காற்று
வெளியேற விடவில்லை
கதவுத் தாழ்.....

வாழ்க்கையில் வசந்தங்கள்
எப்பொழுதாவது தான்
வாசல் வருகின்றன
நீ உள்ளே அனுமதிக்கிறாய்
நான் அனுமதிப்பதே இல்லை...

உன்னை விடுத்து எனக்கென்று
ஒரு வசந்தம் என் வாசல் 
வருமா சொல்...


Thursday, December 13, 2018

Wednesday, December 12, 2018

உறங்காத உரிமைகள்......!

முன் பனிக்காலம்
மார்கழி இரவு.....
நடுநிசி நடுக்கம்
உறங்கும் ஊன்
உறங்காத உரிமைகள்......!

உறக்கத்திலிருந்து நீ எழுவதாய் இல்லை
உரிமையை நான் விடுவதாய் இல்லை...
நான் துறவு நிலை போக
உன் தூக்கமும் காரணம்......!

சொத்துக்காரி
என்றுனை எனக்கு 
க(கா)ட்டி வைத்தார்கள்...
உன் உதட்டோர புரட்சி 
ஓராயிரம் கோடி .....

எத்தனை இருந்தும் 
என்ன பயன்....
உறங்கி கிறங்கடிக்கிறாய்
நான் விழித்து இறந்திருக்கிறேன்

சில தாஜ்மகால்கள்
மும்தாஜ் பார்த்து ரசிக்க அல்ல.... 
ஷாஜகான் பார்த்து அழ....
நினைவுச் சின்னம் நிகழ்வுக்கு இல்லை
மஞ்சளும் குங்குமமும்
மாங்கல்யக்காரி உனக்குத்தானோ....
மன்னவன் எனக்கில்லையோ........

தென்னை நட்டு தின்றாருண்டு
பனை நட்டு பலன் பெற்றார் உண்டா......
பார்த்தே கிடக்கிறேன்
பலன் கிட்டுமா என....

எழில் சுலா......



Monday, December 10, 2018

நட்பு

ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஆனால்...

ஒரு வாழ்க்கை போதாது
என் நண்பனுடன்
வாழ்வதற்கு..!!!


Wednesday, December 5, 2018

நிலை மறந்து


உன் அருகே நெருங்கி வரும் 
போது மட்டும் என் நிலை மறந்து 
போகிறது ஏனே



துளி நம்பிக்கையில்


உனக்கான மழையில் 
என்றுமே 
நனைந்து போகிறது 
என் காதலின் ஈரங்கள் 
நீ துவட்டுவாயென்ற 
துளி நம்பிக்கையில்...!!




Tuesday, December 4, 2018

உயிர்நாடி ஒரு நிமிடம் சிலிர்க்கிறது அம்மா, Amma,

நீ ஆளும் வரை.....
ஏன் நீ வாழும் வரை கூட ....
யாரும் ஆடவில்லை....
பாடவில்லை..
அதுவே உன் ஆளுமை.....திறமை......




Wednesday, November 28, 2018

உணர்வுகளும் உணர்ச்சிகளும்


சுவாசிக்க உன்
மூச்சிருக்கும் வரை 
என் உணர்வுகளும் உணர்ச்சிகளும் 
உயிரோட்டம் பெற்றே உன்னில்
உதிரமாய் வலம் வரும்..


Sunday, November 18, 2018

வெற்றுத் தாளில் ஒற்றைப் புள்ளியாய்

பூமியின் சாபக்கேடு
உயிராய் உயிர்ப்பது
நிஜமாய் ஜனிப்பது
கருவாய் வருவது.....
பெண்ணாய் பிறப்பது....

பத்து நாளில் இட்ட பொட்டு
அடுத்த நாளில் இட்ட சட்டை
அடுத்தடுத்து வைத்த பூ
கைகளில் இட்ட வளை.....

யாருக்காக நான் தாரை வார்க்க
என்னுடன் வந்தவை இவை
எதற்க்காக இழக்க
இழந்து விட்ட எதுவும்
இதற்கெல்லாம் மேல்தான்.....

கை பிடித்த அன்று ஏற்று கொண்ட மஞ்சள் உயிர் விட்ட அன்று கொட்டி தெளித்தாச்சு
கொடுத்து விட்டு சென்ற நினைவலைகள்
வெள்ளையின் வீரியமாய்....

பிறந்ததில் இருந்து உடன் வரும்
என் அடையாளமெல்லாம்......
என் வாழ்வின் நிரந்தரமே
இழந்துவிட இனி என்ன இருக்கிறது

பாதியில் வந்தவன் பாதியில் போனதும்
ஆதியும் அந்தமும் எனக்கு
இனி என் நம்பிக்கை தானே...
வெற்றுத் தாளில் ஒற்றைப் புள்ளியாய்....

வருவதாய் சென்றாய்....

வருவதாய் சென்றாய்....
   வந்ததாய்  தெரியவில்லை
   தந்து சென்றதெல்லாம்
   வந்து வாங்கிச் செல்,.....

   நொடி ஒவ்வொன்றும்
   யுகமாய் தீர்கிறேதே
   சென்ற வழி பார்த்து
   காத்திருப்பும் சுகமாயிற்று

   தீயினும் சூடாய்....
   நீராவியின் வெப்பமாய்
   உஷ்ணமாய் உன் மூச்சு
   என் தோள் பட்ட
   காயம் நீ தோள் சாய்த்தலால் தான்
    மறையும் ....
   
  எல்லோருக்கும்  வரும்
  இரவு பகல் எனக்கின்றி போனதேனோ...
  எப்பதா நீ  வருவே...
  ஏந்திழை நூலிழை யாகும் முன்
  வந்து வென்று விடு...

   வாசல் வைத்து கட்டிய
   என் அப்பன் வஞ்சகன் தான்
   வான் பரப்பே வழி என இருந்தால்
   நீ வரும் அழகு பார்த்திருப்பேன்

    மறக்காமல் வந்து விடு
    என்  மெளனங்கள்
    கண்ணீராவதற்குள்....

    வாழ்ந்து விட வேண்டும்
    அந்த ஒரு நொடியாவது.....
    அது தான் மரண வாழ்க்கை....

Saturday, November 17, 2018

பனைமரம் வளர்ப்போம்-மனிதர்களை காப்போம்...

பனை மரம்:

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்

இந்தப் பழமொழியைக் கூறியேநம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்பனையை விதைப்பவனோஅதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை. 

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம்இதை வற்றாத புதையல் என்றே கூறலாம்பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர்மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர்டாக்டர்மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார்.பனைஒரு மரம் என்று பொதுவாக தமிழில்வழங்கப்படினும்தொல்காப்பியத்தில்குறித்துள்ளபடியும்இன்றைய தாவரவியல்அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச்சேர்ந்த ஒரு தாவரமாகும்இதன் தாவரவியற் பெயர்பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabelliferaஎன்பதாகும்.


பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறதுஅதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியதுபனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவைகிளைகளும் கிடையாஇதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும்இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை.

பனை மரங்கள் 45டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45டிகிரி தென் அச்சரேகை வரையிலுள்ள வெப்பமண்டல பிரதேசங்களில் வளர்கிறதுஇப்பிரதேசத்தை பனை வட்டம் (Palm Belt) என அழைக்கப்படுகிறது.இப்பிரதேசத்தில் அடங்கிய இந்தியா: 60 மில்லியன்,மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்இலங்கை - 11.1மில்லியன்இந்தோனெசியா - 10 மில்லியன்மடகஸ்கார் - 10 மில்லியன்மியன்மார் - 2.3 மில்லியன்கம்பூச்சியா - 2மில்லியன்தாய்லாந்து - 2 மில்லியன் என உலக அளவில் மொத்தளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுஇவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டில்கன்னியாகுமரி தொடக்கம்,திருநெல்வேலிமதுரை போன்ற இடங்கள் உட்படச்சென்னை வரை பனைகள் காணப்படுகின்றனமேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனை மரத்தின் பயன்கள்
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
என்ற நன்றியின் பயனோடு பனையின் பயனை ஒப்பிட்டு வள்ளூவர் கூறியதிலிருந்தே பனையின் மேம்பட்ட சிறப்பு தன்மை விளங்குகிறது.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும்இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள்இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்துவெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப்,பனைகளுக்குப் பயன் உண்டுஇதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள்கற்பகத்தருஎன்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்றஇந்துப் புராணக்கதைகளில்குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும்.பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவுபதனீர் - 180 லிட்டர்பனை வெல்லம் - 25 கிபனஞ்சீனி - 16 கிதும்பு - 11.4 கிஈக்கு - 2.25 கிவிறகு - 10 கிஓலை - 10 கிநார் - 20 கி.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும்,உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றனமுற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தனஇன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள்கைப்பணிப் பொருட்கள்மற்றும் தும்புநார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும்பொதுவாகஇது வளரும் இடங்களிலெல்லாம்வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயரஅடித்தளமாக விளங்குகிறது.
பனைத்தொழில் அன்றும் இன்றும்:

இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது.பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை.முன்பு கரும்பு வெள்ளம்தென்னைபனை கருப்பட்டி,முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது.தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார்அக்காலகட்டத்தில் பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது.குறிப்பாக சொல்வதென்றால் 200 வருடங்களுக்கு முன்பு பனையேறிகள் செல்வந்தர்களாய்நாகரீகம் மிக்க சமுதாயங்களாய்சமுதாய அந்தாஸ்த்துடையவர்களாய் இருந்தனர்கிட்டத்தட்ட 843 மேற்பட்ட பனைசார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனஆனால் கடந்த 150 வருடங்களாய் பனைத்தொழில் நசிவடைந்து வருகிறது
ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதுஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர்,கேக்முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்ததுஅதற்கென கரும்பிளிருக்கும் இரும்புசெம்புமுதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின்அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்திகரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுஇதனை தொடர்ந்து மிகப்பெரியபணப்பயிராக உருவெடுத்ததுஇதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார்மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு சர்க்கரை உற்பத்திகடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும்உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளதுஉலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது .இந்தியாவில் உத்திர பிரதேசம்மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.

கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர்.கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடிநிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது.கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால்நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறதுநிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறதுகடந்த 2007ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினால் நிலத்தடி நீர் இல்லாத கருப்பு ஒன்றியங்களாக வரையறை செய்யப்பட்ட பெரும்பாலான ஒன்றியங்களின் அந்தநிலைக்கு பின்னால் கரும்பு உற்பத்தி என்ற வணிக நோக்கம் அரசு அறியாதது அல்ல.

பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்"கொண்டு பெறப்படுகிறதுபிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லைஅமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளரஇங்கு அப்படியாநிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம்எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்றுஅதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா?என்று சற்றே யோசிக்க வேண்டும்இன்றைய சந்தப்பவாத காசுக்காகநிலையான செல்வங்களான நீர் நில வளங்களைஇழந்து விடக்கூடாது.
இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம்எள்ளுருண்டை,கொழுக்கட்டைபோன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கினஇத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகினஇன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது. .

போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்துசாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறதுஅதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது
பனையேறிகள் வாழ்வும்தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன்ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறதுபனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் பனைத்தொழில்:

தமிழுக்கும்தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தனதற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டனபனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.

பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:

கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க,பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளதுதமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறதுஉடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதுபனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம்ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லைஇதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.இத்தொழிலை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட10இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.
நவீன கண்டுபிடிப்புகளோஇயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லைமாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறதுஅரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.
பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம்முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டுசொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள்இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோவார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள்.மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம்.அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளதுஇவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர்தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

பனைத்தொழிலை மீட்டெடுக்க:

எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.

Special thanks



பனைமரம்

கஜா புயலால் தப்பியது பனைமரம் மட்டுமே.
பனைமரத்தின் வரலாறு  
தெரியாமல் இழந்துவருகின்றோம்


உயரத்துக்கு கிடைக்கவில்லை
ஏற்ற ஜோடி
பனைமரம்




Thursday, November 15, 2018

என் பயணம்


எத்தனை 
ஜென்மங்கள் 
எடுத்தாலும் 
உன் நினைவுகளின்
துணையுடன்
என் பயணம் செல்லும்..!!!


நினைவுகள் கருவறையில்...!


நான் 
தேவையற்றவன்
என்றே தூக்கிவீசினார்கள்...!!

ஆனாலும் 
உயிர் வாழ்கிறேன்

ஒரு அழகிய
இனத்திற்கு வாழ்வளித்து...!! 


என்னவளே


இன்று, 
என்னுள்ள துடிப்பு அதிகமாய் இருந்தது 
என் கடிகார முள் அசைய மறுத்து நின்றது 
இமைப்பது தான் கடமை என்பதை 
என் இமைகளும் ஏனோ மறந்தது 
சற்றும் இடைவெளி இன்றி பேசும் என் உதடுகள் 
பேச வார்த்தைகளை தேடியது உன்னை கண்டதும்....
என்னவளே
  sun tv news reader anitha


என் இதழ்கள்...!

என்னைக் கொஞ்சும் தருணமெல்லாம்
கெஞ்சி நிற்கிறது
ஒரு நிமிட 
விடுதலைக்காக
என் இதழ்கள்
என்னவனிடம்...!


Saturday, November 10, 2018

பேரழகு...!


காதலில்
நான் செய்யும்
சில அபத்தங்கள் 
அழகு
அந்த அபத்தங்களை 
ரசிக்கும் 
அவளோ பேரழகு...


இக்கால காதல்


வேர் விட
வைத்த அன்பை ...
பிரித்திட நினைத்தால் 
"பிசசாயும் " 
மாறும் மாற்றும்  
இக்கால காதல்...


Friday, November 9, 2018

கனவில் கலந்த சுவாசமே...


கனவில்
சொர்ப்பனமாய்..
நினைவில்
சொர்க்கமாய்..
நிஜத்தில்
சொந்தமாய்..
என் 
அனைத்திலும்
உயிராய்
உறைந்திருக்கிறாய்
உணர்வில்
கலந்த சுவாசமே...



Wednesday, November 7, 2018

இதயம்...!


கை மேல் கை வைத்து,
கதை மேல் கதை பேசி,
இதழ் மேல் இதழ் வைத்து,
ஓரங்க நாடகத்தில்
வீழ்ந்து விடுகிறது
இதயம்...!






என்ன ஆனது எனக்கு...!



பேருந்து சென்ற பின்பும்
நிருத்தத்தில்
காத்திருக்கிறேன்.
அவள் சூடி உதிர்ந்த
மலர்களை, நாடி எடுத்து
நுகர்கிறேன்.
தினம் வாடி ஒலி(ளி)க்கும்
பாடலைத், தேடி பிடித்துக்
கேட்கிறேன்.
அகம் உறங்கும் கவலை மற(றை)க்கவே, போலி சிரிப்பு சிரிக்கிறேன்.
என்ன ஆனது எனக்கு...!


கனவுகாதல்...!


என்னை 
கடந்து 
சென்றாலும்

விட்டுச் 
செல்ல 
மாட்டாள் 

என்ற 
நம்பிக்கையோடு 
அவளை 
பின் தொடர்கிறேன் 
கனவுகாதல்...!





உன்னில்....


தாங்கும்
உலகமென
நீயிருக்க
வீழ்வதில்
பயமில்லை
உன்னில்....





Monday, November 5, 2018

ஆசை சிறையில் ...!


ஆசைகள் 
அடைப்பட்டு
நிற்கிறது.
வறுமை
என்னும் 
சிறையில் ...!



கவசமாய் வேண்டும் நீ...!


உன் மீதான ப்ரியங்களை
பொய்யூற்றி நிறைக்கவில்லை..
பெருவெளியில் பறக்கும்
பறவைக்கான..
துணைத்தேடலாய்..
கோணல் பார்வைகளை
எரிக்கும் 
நெற்றிக்கண்ணாய்..
சில வெந்நீர் சொற்களை
தவிர்க்க உதவும்
பாதுகாப்பு கவசமாய்
வேண்டும் நீ...!


கன்னங்கள் சிவக்கும்...!


மருதாணியை
கை யில் வைத்தால்
கை கள் சிவக்கும்
மனதுக்குள் காதலை 
வைத்தால் கன்னங்கள்
சிவக்கும்...