Friday, July 27, 2018

தமிழர் திருநாளில் தமிழர்

தமிழர் திருநாள்!
உயர் தமிழர் திருநாள்!
உடன் பிறப்பெ!
என்ன செய்கிறீர்கள்?
இல்லம் பதுங்காதீர்!
ஒய்வு எடுக்காதீர்!

தமிழ் ஆண்டை சித்திரைக்கு
மாற்றி விட்டார்களா?
வருந்தாதே உடன் பிறப்பே!
மீண்டும் தமிழ் ஆண்டு
தையில் மலரும்.

தை தமிழ்ஆண்டு பிறப்பாக்க
ஆடு மாடுகளுக்கு அலங்காரம்
செய்து உங்களுக்கு நாங்கள்
சளைத்தவர்களல்ல என
எட்டு திக்கும் முழங்குவோம்.






Source: https://eluthu.com/kavignar-kavithai/887.html

ஒரு தாயின் தாலாட்டு!

"பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும்மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அண லோனே."







ஒரு பொது மகளின் புலம்பல்!

"கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித், தம்இல்
ஆடிப்பாவைபோல,
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே!"


ஆசை கொண்டேன்...!


கோபத்தில் கோவப்பழமாய் சிவக்கும் 
உன் கண்களை அன்பெனும் 
அலகால் கொத்தித் திண்ணும் 
கிளியாக ஆசை கொண்டேன்...


உன் மனமொழி...

உன் மனமொழி..
மௌனமாகிப்போனாலும்..
மெலிதாய் கேட்கிறது,
 இந்த ஊமை செவிகளுக்கு...


என்னவனே...


என்னை அறிந்த உனக்கு என் 
செல்லமான கோபங்களை கூட அறிய 
முடியவில்லையாடா உனக்கு....



இயல்பே அழகு!


ஒப்பனைகள் தேவையில்லை
அவளுக்கு ஏனெனில் 
இயல்பே அழகு 
இயல்பாகவே அவள் 
மிக அழகு



Thursday, July 26, 2018

உன் காந்த கண்கள்...!


உன் கண்கள் என்ன காந்தத்தால் 
ஆனதா என்னை இப்படி ஈர்க்கிறது..... 
என்னை வசிய படுத்த உன் கண் மை போதாத...... 
உன் கண்களின் கண்ணீர் 
நான் விரும்பா மழைக்காலம்.......


காதல் பித்தன்...!


புத்தனைப் பித்தனாக்கும்  காதல்
இப் பித்தனை மட்டும்
புத்தனாக்கியது ஏனோ...??



அழுத்தக்காரி தான் நீ...

உன் நினைவுகளை எழுதுகிறேன்

கனத்து போகிறது காகிதம்... 

அழுத்தக்காரி தான் நீ...




Wednesday, July 25, 2018

அவள் கண்கள்...!

உதடுகள் பாடும் பாட்டிற்கு, 
நடனமாடுகின்றன அவள் கண்கள்...



அவள் கால்த்தடம்...!

சாலையோரப் புற்கள் எல்லாம் இன்று போராட்டம் செய்கின்றனவாம்..
உன் கால்த்தடம் படவில்லை என்று...!! 






அவளுக்காக...!

 எந்த திறமையும் இல்லாமல்
இருந்தேன் என்ற கவலையை
போக்கத்தான் படைக்கப்பட்டது
போல அவள் கண்கள்...

நான் எழுதிய எழுதப்போகும் இயல்களை
அவள் கயல்கள் கொடுக்கும்வரை அவளுக்கே
முழுமையாக உரிமையாக்குகிறேன்...

எனக்கு இயல்களை இன்பமுடன்
வழங்கும் அவள் கயல்களின்
துணையுடன் என் தமிழின்
வாழ்த்துக்களுடன் தொடங்குகின்றேன்
இத்தளத்திற்கான எனது முதல் இயலை...


Source: https://tamil.pratilipi.com/read?id=6487515983773696


வன்முறை முத்தம்...!


வ‌ன்முறை த‌வ‌று என்கிறாய். உன் முத்த‌த்தை விடவா‌..
கொலை செய்த‌ல் பாவ‌மென‌ சொல்கிறாய்.. 
உன் புன்ன‌கையை நிறுத்தாம‌ல்..
போதை வ‌ழி செல்லாதே என‌ போதிக்கிறாய்..
உன் க‌ண்க‌ளை என் செய்வாய்..
இதுவும் க‌ட‌ந்து போகும் என்கிறாய்... 
உன்னைத் த‌விர‌ ஏதும‌ற்ற‌ நான்...
வ‌ன்முறை த‌வ‌று என்கிறாய்...
உன் முத்த‌த்தை விடவா‌...







Tuesday, July 24, 2018

என் ராட்சசி


 ராவணனைப் போல்
எனக்கும் பத்து தலைகள்
கேட்கிறேன் வேறெதற்கு
இருபது கண்களால் 
உன்னைப் பார்ப்பதற்கு…


Monday, July 23, 2018

தாயின் முதல் இசை...

அன்னையின் இதயத்துடிப்பு
மனதை மயக்கும் முதல் இசை...

காதல் செடி...!

பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடியாக இரு
அப்போது தான்
பூத்து கொண்டே
இருப்பாய்...

படித்ததில் பிடித்தது...!

மனசுக்கு பிடிச்சவங்க
முகத்துல வர்ற சின்ன சந்தோஷத்த
பாக்குறதுக்காக விட்டு கொடுத்து வாழ்றது ஒன்னும் தப்பில்லேயே...

Saturday, July 21, 2018

மீண்டும் உனக்கே மகனாவேன் அம்மா ...

தாயே....
உனக்கு முன் .......
நான் இறந்தால் .....
என் கல்லறையில்......
உன் பெயரை எழுதி வை
கல்லறையில் இருந்து .....
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உனக்கே மகனாய் ....
பிறப்பதற்காக .....!!! 



முதல் இசை...!

அன்னையின் இதயத்துடிப்பு 
மனதை மயக்கும் முதல் இசை...




அப்பா...!

என் அப்பா ஏழை 
தான் ஆனால்
ஒரு போதும் அவர் 
என்னை ஏழையாக
வளர்த்தது இல்லை...!



படித்ததில் பிடித்தது...!

பிறக்கும் போது பனிக்குடம்
உடைகிறது…
இறக்கும் போது மண்குடம்
உடைகிறது…
வாழும் போதாவது பிறர்
மனம் உடையாமல்
வாழ்ந்து காட்டுவோம்...!



தாய்மாமன் உறவு...!

தாயின் உறவையும் தாண்டிய உறவாம்-
தாய்மாமன் உறவு...!





அம்மாவுக்கு முதல் கவிதை...!

நான் கருவறையில் எட்டு உதைத்த போதிலும்
மனம் மகிழ்ந்து சிரித்து ரசித்தவளும் அவளே...
தன் வலி பொறுத்து
என்னை வெளியெடுத்து
வடிவம் அமைத்ததும்
அவளே... அம்மா...!

தாய்மாமன்...!

எந்தவித ஏதிர்ப்பார்ப்பும் இல்லாமல்
தாயை போல தாய்வழி உறவு...!
யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத உறவு...!
தாய்மாமன்...!

அம்மாதிகாரம்...!

நம் அறியா வயதிலே நம் அம்மாவுக்கு
நம் பரிசளித்த  முதல் கவிதை அம்மா...
கன்னத்தில் எழுதியது
நம் முத்த வரிகள்...

வாலிப காதல்...!

தன்னை தானே "வருத்தி"
கொள்வதை.. "இன்பம்"
என்று நம்பி கொண்டிருக்கிறது வாலிப காதல்...!

அம்மா அப்பா...!

அம்மா மட்டுமில்லை
அப்பா என்றாலும்
மூன்றெழுத்து
கவிதை என்பது
மகளுக்கு மட்டுமே தெரியும்....



காதலிசம்...!

நானும் காதல் கொண்டேன்...
நானும் கனவு கண்டேன்...
நானும் கவிதை சொன்னேன்...
நாளான பின்னேதான்...
நான் அறிந்து விழித்தேன்...
நான் கண்ட யாவும்...
நகலான பொய்யென்று... என் காதல்...!!


தாய்மாமன்...!

அழுது ஆர்ப்பாட்டம் செய்து
மொட்டை அடிக்க ஒர் மடி தந்த சொந்தம்,
மணவரையில் சடங்குகள்
செய்யும்வரை தொடர்வது...! தாய்மாமன்...!



தோழமை...!

நம் பெருமையில்
குளிர் காயும் நண்பனை விட
நம் சிறுமையில் ஆறுதல்
தரும் நண்பன் இருப்பது வரம்...தோழமை...!

தேடியும் கிடைக்காத தேடலே அம்மா...!

தன் வலி மறந்து
தன் தூக்கம் கலைந்து
தன் இயல்பு வாழ்வை விட்டு
என் சிறு சிறு குறும்புகளை ரசித்தவளே
உன் ரசனைக்கு என் கவிதை ஈடாகுமா...

வெட்கம்...!

உன் கண்ணைப் பார்த்து
பேசாதபோதும் என்னை
கட்டியணைக்கிறாயே...

ச்சீ.....  வெட்கமாயிருக்கு...!





தாய்மையின் ஆண்பால் உறவு தாய்மாமா...!

தாய்மையை போற்றும்
கலாச்சாரத்தில் தாய் என்ற
அடைமொழியுடன் அழைக்கப்படும்
ஒரே ஆண்பால் உரிமை உறவு
தாய்மாமன்...!


முதள் வார்த்தை அம்மா...!

எத்தனை முறை பேனா
முனை பிடித்தாளும்
என் மனதிள் வரும்
முதள் வார்த்தை
அம்மா...

அம்மாவுக்கு :- ஆயிரம் தான் கவி சொன்னேன்

Thursday, July 19, 2018

உன்னை கானாத நாட்கள்...!

உதடுகள் சொல்கிறது உன்னுடன்
பேசும்போது நலம் என்று
ஆனால் கண்கள் சொல்கிறது
உன்னை கானாத நாட்கள்
நரகம் என்று...!

உன் நினைவுகள்...!

என்னைச் சுற்றி சுற்றி வரும் உன்
நினைவுகளால் விழி முடாத
இமைகளாகி போனது என் இரவுகள்...!

விரும்பி கேட்கும் மரணம்...!

விரும்பி கேட்கும் போது
வராத ஒன்று
வாழ நினைத்து
நகரும் போது வந்து விடுகிறது
"மரணம்" !!

உனக்காக...!

நீ வாழும் நாட்கள்
எனக்காக இருந்தாலும்.‌...
நான் விடும் மூச்சு
உனக்காக
இருக்கும்....!!!

Wednesday, July 18, 2018

விழி பார்வையில்...!

உன்னை பார்க்க அடம் பிடிக்கும்
என் விழிகளுக்கு
எப்படி புரிய வைப்பேன்?
என் இதயத்தில் நீ இருக்கிறாய்...! என்று...!

காதல் கொள்வாயா...!

என் மீது
காதல் கொள்வாயா?

இல்லை
என் அன்பே
என்னைக் கொல்வாயா?

கண்களிலே
கவிதை சொல்வாயா?

இல்லை
கண்ணீரை
தந்து செல்வாயா?

கனவில் நீ...!

கனவில் மட்டுமே கையில் சேருகிறாய்!
கனவு கலைந்ததும் தீயாய் சுடுகிறாய்!
வெயிலில் நிழலைத் தேடுவது போல்
நினைவில் மட்டும் சுகம் காண்கிறேன்!
நான் நாள்தோறும்!!!

நினைவில் நீ!!!

நிசப்தமான இரவில் - உன்
 நினைவில் மீட்டிப் பார்க்கிறேன்
 வீணையின் கானம் போல்
 இனிமையாய் ஒலிக்கிறது
 உன் நினைவுகள்
 புன்னகை பூத்து - உன்
 அன்பான பார்வையில்
 என்னை அடிமையாக்கியவளே
 உன் அருகில் இருந்த - இந்த
 அழகான தருணங்கள்
 அழியாது என் மனதை விட்டு
 திருமண பந்தத்தால்
 திசை கடந்து போகிறாய்
 திரும்புமா உன் மனதில்
 என் நினைவுகள்.

Monday, July 16, 2018

அக்கா & அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

தாய் பாலையே தரம் பார்க்க எனக்காக பிறந்தவர்கள்க்கு (அக்கா & அண்ணா) பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

கண்டேன் காதலியை ...!

உன்னை கண்டதும் சூரியன் மறைந்து சுடும் நிலவு தோன்றுதடி !
உன் பால் முகம் கண்டு பௌர்ணமி மீளுதடி...

சந்தோஷம்...!

எனக்குள் உள்ள சந்தோஷத்தை!
இரவலாகக்கூட  தந்துவிடுகிறேன் - ஆனால்!
விலைக்கும் கிடைக்காது!எனது துக்கங்கள்...!

Saturday, July 14, 2018

முத்த வாசம்..!


என் கன்னத்தில் மணக்கிறது...
உன் கசங்கிய இதழிகளின் வாசம்...
முத்த...!

காதல் வாசம்..!

வாசனைப் பூக்களாய் வீசுகிறது...!
உன் வார்த்தைகள்!!!

ஒரு தலை காதல் கவிதைகள்!!!

முகவரியில்லாமல் வந்து சேரும்
காதல் கடிதங்கள்
உன் நினைவுகள்...!

ஒரு தலைக் காதல்!!!

ஏன் கனவுகள் பூக்கட்டும்
உன் நினைவுகளில் மட்டும்...

உன் நினைவலைகள்!!!

பாதையில் முள் இருக்கும் என்று
உன்னை தூக்கி விட்டு சென்றேன்...!
நீ என்னிடம் முள்ளை
வீசி செல்வாய் என்பதறியாமல்...!

இரவு காதல் கவிதை

உன்னை உரசியே
இரவை
கொளுத்தணும்...!!!

காதல் சுகமே

நீ இயற்கை செடியில் பூத்திருந்தால் உன்னை இறைவனுக்கு படைத்திருப்பேன்...
ஆனால் நீ என் இதய செடியில் பூத்த தால்
நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.....

Friday, July 13, 2018

காதல்

நீ என்னை...
நினைக்கும் நிமிடங்களில்...
உன்னை தொடாமலே...
உன் மனம் நுழைகிறேன்...
இதயத்தின் பரிந்துரையால்...

Wednesday, July 11, 2018

நம்பிக்கை

தாவறுந்த வாழ்வின் முடுக்கிலேனும் சிறுதுளி நம்பிக்கையிருக்குமேயானால் எவனாலும் உன்னை எதுவும் செய்ய முடியாது...

காதல் கவிதை

உன்னைப்போல் ஒருத்"தீ" வேணும்
நான் குளிர்காயவும் சேர்ந்தே எரியவும்...

Tuesday, July 10, 2018

பெண்கள்

பெண்களின் மார்பகம் என்பது குழந்தைக்கு உயிருட்டும் உறுப்பு என்பதை ஆண்கள் உணர்ந்தால் அது கவர்ச்சி பொருள் ஆகாது... அதையே பெண்கள் உணர்ந்தாள் காட்சி பொருள் ஆகாது ....