Thursday, April 25, 2019

நீ நிலவல்லவா

புகைப்படத்தில் 
உன் அரை முகம்
தெரிந்தாலும் அதையும்
ரசிக்கிறேன்
பிறை என்றாலும்
நீ நிலவல்லவா...



Tuesday, April 23, 2019

இதயம்...

உன்னை நேசிப்பதற்கு இதயம் 
உன் அழகை காண கண்கள் 
என் சுமைகளை இறக்க தோள்கள் 
அதுவும் நீயாக இருந்தால்... 
இதயம் மட்டும் அல்ல 
என் உயிரையும் கொடுப்பேன்....


காதல்...

பெண்களின் காதல் பூவிலுள்ள 
பனித்துளி போல அழகானது...
ஆண்களின் காதல் வேரில் 
உள்ள நீரைப்போல ஆழமானது...


Friday, April 19, 2019

கரைந்து போகிறேன்...

உன் விரல்கள்👆 
என்னை தொடும் ஒவ்வொரு நொடியும் வெயிலில்🌞 
கரைந்து போகும் பனித்துளியாய்🌬 🌨
நான் கரைந்து போகிறேன்..🌊😊


காத்திருந்த என் விழிகள்...

ஒவ்வொரு நொடியும் உனக்காய்😍 
காத்திருந்த என் விழிகள் 👀
இன்று பல மணிநேரமாய் 
உறக்கத்திற்காக காத்திருக்கிறது, 
கண்ணீரோடு...



Friday, April 12, 2019

என் நினைவின் முடுக்கெல்லாம் நீதான்...


உன்னை சுற்றும் துளசி மாடங்களையும்...
ஊடல் நிறைந்த திண்ணைகளையும்... 
அடர்வெயில் சோலைகளையும்... 
ஆடைதுறந்த பெருவெளிகளையும்... 
அணைத்துக்கொண்டு கிடக்கிறேன்... 
என் நினைவின் முடுக்கெல்லாம் நீதான்... 


என் வாழ்வில்...



அன்பின் உருவம்
உன்னிலிருந்தே
தொடங்கியது
என் வாழ்வில்...



அவளதிகாரம்


உன் முகம் காணா நாள்

பௌர்ணமியும்

அம்மாவாசை ஆனதே...


Tuesday, April 9, 2019

மகளதிகாரம் கவிதைகள்

என் அம்மா 
எனக்கு சூட்டிய பெயர் 
எத்தனை அழகானது 
என்பதை..,

என் மகள் 
என்னை அழைக்கையில் 
உணருகிறேன்...


Monday, April 8, 2019

நினைவூட்டல்


என்னுடன் நீ அறிமுகமான புதிதில்  எப்படி பழகினாய் 
என்பதை நினைத்துப் பார் 
நீயே வெறுத்துக் கொள்வாய் 
உன் செயலை எண்ணி..!