Thursday, August 30, 2018

உயிரானவனே...!


உன்னுடனான
உரையாடலில்
உறைந்து விடுகிறேன்
உன்னில் முற்றிலும்,
உனக்குள் நானாகவே
உணர்வுபூர்வமான
உன் அன்பில்,
உள்ளம் மகிழ்ந்து
உன்னில்
உன் உணர்வில்
உன் உயிரில்
உருவமாக
உனக்குள் நானாகவே
உயிரணுவாய்
உருப்பெற்றிருக்கிறேன்..
உயிரானவனே...




Wednesday, August 29, 2018

காதல் டு கல்யாணம்...!


காதலில் தோற்று.... 
பிறகு திருமணம் செய்துகொண்டு வாழும் போது....
பெண்கள் என்றால் இதுதான் எனற புரிதல் வந்து விட்டதாய் காட்டித் தொலைப்பது .....
ஆண்களின்.... மரபு... 
காதல் டு கல்யாணம்...!





காதல் எல்லை...


காதலுக்கு எல்லை...அனை
என்றது வெட்கம்
காமத்துக்கு இல்லை..அணை
என்றது ஆசை
உடையாய் ..அனையாய்..
நான்..என்றது வெட்கம்
உடைக்கும் வெள்ளமாய்
நான் என்றது..ஆசை
வெட்கமும்..ஆசையும்
சமரசம் காண..
அனையும்..வெள்ளமும்..
சேர்ந்தே கலந்தது ..மன்மதக்கடலில் 
நயினாரின் உணர்வுகள்.



காதலும் பிரிவும்...!


உதடுகள் பேசிய
" வார்த்தைகளை "
எல்லாம் " உள்ளங்கள் "
உலாவிக்கொண்டு
இருக்கிறது
"" காதலும் பிரிவும் ""
தனிமை என் சந்தோஷம்



ஒற்றை திலகம்...!

ஒற்றை திலகம்...!
என் நெற்றியில்
நீ இடும்
ஒற்றை திலகத்தில்
என் அகிலம்
அத்தனையும் அதனுள்
அடங்கிப்போகின்றது....



என் இதயத்தில்...!


கவிதை 
எழுதுவது
கடினம் 
என்கிறார்கள்.. 
நீ
என்னுடன்
பேசிய 
வார்த்தைகளை
வைத்து 
ஒரு 
நூலகமே
அமைத்து 
விட்டேனடா... 
கவிதையால் 
என்
இதயத்தில் 
உனக்காக...





Tuesday, August 28, 2018

கண்ணீரை பரிசளிக்காதீர்கள்...!


அன்பை தருபவர்களுக்கு
கண்ணீரை பரிசளிக்காதீர்கள்..!
வெறுப்பைத் தாங்கும் சக்தி நிச்சயம் அவர்களுக்கு இருக்காது.
அந்த வலி உங்களுக்கும் புரியாது.
நற்காலை...



கனவு உலகில் நீயும் நானும்...!


இரவில் தூக்கம் வரும்..... 
இதயம் மட்டும் உன்னை தேடி வரும்.....
என்றும் என் கனவில் வாழ்வேன் உன்னுடன்.... 
கனவு உலகில் நீயும் நானும்...




உறவுகள்...!


கண்ணாடியில் பார்ப்பதாக
நினைத்து சில உறவுகளை 
ரசம்  இழந்த கண்ணாடியில் 
பார்க்கிறோம் 
நிதர்சனம்



என்னவனே...!


நீ என்னை 
பார்த்து பார்த்தே ! 
"நான் உருகி 
போனேன் 
"உன் அனல் 
போன்ற !! 
பார்வையினால் !!! 



கொள்ளை...!


இதயத்தை கொள்ளை அடித்த விசித்திரமான திருடி அவள்... 
கொள்ளையிட்டு சென்றதும் நிரம்பி வழிகிறது 
என் இதயம் அவள்தன் நினைவுகளால்...







மழை பொழிந்தது...!


ஒரு குடையின் கீழ் நனைந்தோம்..
சூடான தேனீர்  பருகினோம்...
பேசினோம்...சிரித்தோம்...
மண் வாசனையாய் 
மனசுக்குள் இருந்த நட்பு
மழையில் முழுக்க நனைந்து....
காதலாய் வெளிவந்தது!!





கொட்டும் மழையில்...!


கொட்டும் மழையில்மின்னின மழைதுளிநீ !
ஆரவாரமற்ற இரவுநேரத்தில் தேகம் தீண்டிசெல்லும் தென்றல்நீ !
ஆழமானஅன்பால் இதயம்வடிக்கும் கண்ணீர்துளிகள்நீ !
திறக்கமறுத்த உதடுகளில் தடையின்றிபிறக்கும்புன்னகைநீ !
என்னைமறந்த நொடிகளில்உன்னை தேடவைக்கும் நினைவுகள்நீ 





Friday, August 24, 2018

திருட்டு கவிதை...!


இரவும் பகலும் உணவு தூக்கம் மறந்து 
எழுதினேன் கவிதைகனை. 
அதை நீ திருடி உன் பெயர் போட்டு 
பதித்தாய் வேறு ஒரு இணைப்பில் . 
என்றும் இல்லாத ஆனந்தம் 
இன்று எனக்கு . 
நானும் கவிஞன் ஆகிவிட்டேன் என்று. 
ஏன் என்றால் 
உன்னை திருட வைக்கும்அளவுக்கு 
என் படைப்பு உன்னை ஈர்த்து இருக்கிறது அல்லவா...



காதல் ஏகம்...


ஏதோ ஒரு எண்ணை
அலைபேசியில்
தேடுகையில்..
உன் பெயர் பார்த்ததும்
ஒரு கணம் நின்று பின்
பயணிக்கின்றன விரல்கள்.!!



மழை கவிதை..


விழுந்து விழுந்து..
சிரிக்கிறது மழை.
நயினாரின் உணர்வுகள்.



என்னை ரசித்தபடி...!

அவனின் செல்லமான 
கொஞ்சலில் 
சிலை போல
நானும்,
சிற்பியாய் அவனும்
முத்தங்களை என் 
மேனியில் 
செதுக்குகிறான்
என்னை ரசித்தபடி....



Thursday, August 23, 2018

சித்தி கவிதைகள்...

சித்தி
செத்தும் 
வாழவைத்தாள் சீதக்காதி ... 
ஆம் ... 
தன் மகள் வாழ 
அக்காள் மகளை....


சித்தி கவிதைகள்...



நான் தாயாகும் முன்னே 
எனக்கு தாய்மையை உணர்தியவனே... 
உன்னை பத்து மாதம் கருவில் சுமக்கவில்லை 
இனி மொத்த காலம் உயிரில் சுமக்க விரும்புகிறேன் .... 
நாளை என் பிள்ளை வந்தாலும் 
எனக்கு என்றும் தலைமகன் நீயடா......... 
சிறுசிறு சிணுங்களில் 
என்னை மயக்கியவனே... 
உன் தாமரை இதழ் விரித்து 
என்னை சித்தி என்று 
அழைக்கும் தருணம் 
எப்போதடா...




Wednesday, August 22, 2018

தொலைந்து போனதா...

தொலைந்து போனதா...
விலகி போ...... 
என்று நீ 
சொல்ல..... 
உன் கண்கள் காணாத 
தூரத்தில்... 
நான் விலகி நின்றேன்.... 
உனக்கு தான் தெரியுமா..?? 
விலகி நின்றது என் தேகம் 
மட்டும் என்று.... 
உன் உள்ளம் 
உணரும் தூரத்தில் நான் 
இருக்கிறேன்.... 
இருந்தும் உணர மறுப்பதேன்....??? 
தொலைந்து போனதா....???? 
நீ என்மேல் கொண்ட உண்மை அன்பு...???




பூவிதழ் முத்தத்தில்...



வில்லேந்தும் விழியிலே, 
சொல்லேந்தும் சுந்தரியே ! 
இல்லாத காதலால், 
தினமென்ன கொல்லுறியே ! 
புன்சிரிப்பில் வெட்டிய வெள்ளரியே... 
பூவிதழ் முத்தத்தில் வெல்லுறியே...



ஆண் தோழன்

ஆண் தோழன் அமைவது...
எதார்த்தமோ........
அதிர்ஷ்டமோ .......
இல்லை.......
புரிதலின் வரம்.......
நீயும் நானும் இன்னொருமுறை
பிறக்கப்போவது இல்லை....
இருக்கும் காலம் வரை...
அன்பாலே இணைந்திருப்போம்.நட்பே...
என் முகநூலின் முதல் நண்பன்....
நீதான் .....காலமெல்லாம் தொடரட்டும்
நம் பந்தம்.....




நட்புக்காலம்



நட்புக்காலம்
உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என்
கவிதை

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை ....

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்
நீ

உன்னுடன்
சேர்ந்து நடக்க
ஆரம்பித்த
பிறகுதான்
சாலை ஓர
மரங்களிலிருந்து
உதிரும்
பூக்களின் மௌனத்திலும் நான்
இசை
கேட்க
ஆரம்பித்தேன்


பள்ளி மைதானம்
காலை
வணக்கம்
காற்று கலைத்ததைக்
கண்களால்
மூடினேன்

இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
சந்தேகங்களுக்குத்
துணையாய்ப்
புத்தகங்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
நிதானமாய்ப்
பேசிக் கொண்டிருந்தோம்
நாம்

அனைத்துக் கல்லூரிப்
போட்டிகளுக்கான
பங்கேற்பிற்காகத்
தற்செயலாக
அமைந்த
அந்தத்
தொடர்வண்டிப் பயணத்தில்
என்
தோள் வாங்கித்
தூங்கிய
உன் மூடிய விழிகளில்
விழித்தேன்
முதன் முதலாய்
நான்

அம்மா அப்பாவிடம் அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த பரிமாறலுக்கு
நடுவே....
"எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில்
இவன் என்
நிச்சயிக்கப்பட்ட நண்பன்"
உன் குரல்
இப்போதும் கேட்கிறது
எனக்குள்

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்

என் காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து வைத்தபோது
நீ விழுங்கிய
எச்சிலில் இருந்தது
நமக்கான நட்பு

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன்
புன்னகை

நீ
நிரூபித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான்
மதிக்கும்
ஆண்மை

பால் வாசனையில்
அம்மா
அக்குள்
வாசனையில்
துணைவி
இதயத்தின்
வாசனையில்
நட்பு

நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்

கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனைக் கண்களுக்கு
வாய்த்திருக்கும்

பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத் துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை

உனக்கு மடல் எழுத
உட்காருகிற போது
மட்டும்தான்
அப்புறம்
எழுதிக் கொள்ளலாம்
என்பதற்கான
அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய்
எனக்குக் கிடைத்து
விடுகின்றன

போக்குவரத்து அதிகமுள்ள
அந்தச் சாலையோரத்தில்
நாம் பேசிக்கொண்டிருந்த பொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்

"எனக்கு மட்டும்" என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
"வெளி"வாங்கிப்
பூக்கிறது
நட்பு

தேர்வு முடிந்த
கடைசி நாளில் நினைவேட்டில்
கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கைஎன்று

கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக்
கண்டதும் எப்படி
இவ்வளவு
இயல்பாய்
தூங்கிவிடுகின்றன

தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது
தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது

காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல்
அவ்வளவு
எளிதன்று

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளிநின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்
நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறித்
தூங்கிக்கொண்டு வந்தோம்

தூங்கு என்று
மனசு
சொன்னதும்

உடம்பும்
தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது

சேர்ந்து
நிழற்படம்
எடுத்துக் கொண்டு
அடிக்கடி
மடல் எழுதுவதாகச்
சொல்லிக் கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
மனைவியிடமும்
பிள்ளைகளிடமும்
பேத்திகளிடமும் கூட
சிர்க்கச்
சிர்க்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்
எதைப் பற்றித்தான் நாம்
பேசிக் கொள்ளவில்லை
காதல் காமம்
குல்சாரி
தெறி
ஈழம்
அகிரா குரசேவா
புல்லாங்குழல்...
காற்றுக்குள் மிதக்கும்
நம்
உரையாடல்களைச்
சேகரிக்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா

கண்களை வாங்கிக் கொள்ள
மறுக்கிறவள்
காதலியாகிறாள்
கண்களை
வாங்கிக் கொண்டு
உன்னைப்போல்
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்


ஒரு ஞாயிற்றுக்கிழமை
மதியத்தில்
தாமதமாய் வந்து
என்னை எழுப்பாமலேயே
நீ சொல்லியபடி
நான் சமைத்து வைத்திருந்த உணவை
நிதானமாகச்
சாப்பிட்டுவிட்டு
என் பக்கத்திலேயே வந்து
படுத்துத்
தூங்கிவிட்டும் போயிருக்கிறாய்
என்பதைச் சொல்லிப்
பரிகசித்தன
என் தலையணையில் சில
மல்லிகைகள்


என் துணைவியும்
உன் கணவரும்
கேட்கும்படி
நம்
பழைய மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு
மழை தொடங்கும்
நாள் வேண்டும்


அந்தப் பந்தியில் நான்
மேற்பார்வை
செய்து கொண்டிருக்கையில்
உனது
இலையிலிருந்து
காற்றில் பறந்துவந்து விழுந்த
உடைந்ததே
அந்த
அப்பளத்திற்குத்தான்
முதலில் நாம்
நன்றி சொல்ல
வேண்டும்


இரண்டு இரவுகள் ஒரு பகல்
ஈரக் காற்றுகளால் நெய்த அந்த
அந்திப் பொழுது
யாவும் பாழாக
அந்தத்
தொடர் வண்டிப் பயணத்தில்
எனக்கு எதிரிலேயே
அமர்ந்து, தூங்கி,
சாப்பிட்டு, படித்துப்
பேசாமலேயே
இறங்கிப் போக பெண்ணே
உனக்குக் கற்றுக்
கொடுத்தது
யார்


எனக்குத் தெரியும் நீ சாப்பிடும் நேரத்தின் கடைசி குவளை
தண்ணீரில் இருக்கிறேன்
நான்


அந்த
மொட்டை மாடியின்
வெளிச்சம்
குறைந்த இரவின்
தனிமையில்
நம்மை
அருகருகே
படுக்க வைத்துவிட்டு
நாம்
பேசிக்கொண்டே
போய்வந்த
பாதைகளைத் தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து
பார்க்கின்றன


நண்பர்கள் என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்
எனக்குத் தெரிய அண்ணன் தங்கை என்று ஆரம்பித்தவர்களே
கணவன் மனைவியாகவும் ஆகியிருக்கிறார்கள்
ஆனாலும் சொல்கிறேன்
நட்பு என்பது நம்மைப்போல் என்றும்
நட்பாகவே இருப்பதுதான்


உனக்கான பதில்களை
என்னிடமிருந்து
நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிற போதெல்லாம்
தலைமுறைகளைத்
தாண்டிய நம்
பாட்களின்
உறைந்து கிடைக்கும்
மௌனங்களையெல்லாம்
உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான்
கருதுகிறேன்



துளியே கடல்
என்கிறது
காமம்
கடலும்
துளி
என்கிறது
நட்பு



அந்த விளையாட்டுப்
போட்டியைப்
பார்க்க நாம்
ஒன்றாகச்
சென்றோம்
இரசிக்கையில்
இரண்டானோம்
திரும்பினோம்
மறுபடியும்
ஒன்றாகவே


உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற
எல்லையை
ஒரு நாள் தற்செயலாக
நான்
மீறிவிட்ட
கோபத்தில்
ஏறக்குறைய
நாற்பது நாள்கள்
என்னோடு நீ
பேசாமல்
இருந்தாய்
ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன் மறுபடியும்
புதிதாய்
நான்


உனது சிறிய பிரிவிற்கான
வலியைச்
சமாதானப்படுத்திக்
கொள்வதற்காகப்
பெரிய
பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள்
நிறைந்த
அந்த
விமான நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு
வந்தேன்

போகிற இடத்தில்
என்னை
விட
அழகாய்
அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற
பயம்
நல்லவேளை
நட்பிற்கு
இல்லை

ஆய்வை முடிக்கிறவரை
காதலனை
வரவேண்டாம் என்று
கட்டளையிட்டாய்
வந்துகொண்டே
இருக்க வேண்டும்
என்று என்னிடம்
கெஞ்சினாய்
உன்னைக்
காதலிப்பவனும்தான்
எவ்வளவு
உயர்ந்தவன்
உணர்ந்து கொண்ட மௌனத்திற்கென்றே
ஒரு
புன்னகை
இருக்கத்தான்
செய்கிறது
என்பதை அவன்தானே எனக்குச்
சொல்லிக் கொடுத்தான்

எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது



சன்னலில்லாத
விடுதி அறையும்
அட்டவணைச் சமையலும்
நம்மை
வாடகைக்கு வீடெடுக்க வைத்தன
கல்லூரிக்கு
வெளியே
அறைக்குள் வந்து
இல்லறத்திற்காகவே கூடுதேடும்
இந்தச்
சிட்டுகளுக்குத் தெரியுமா
நமது நட்பு


ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலிகேட்டு
வந்து திறந்தேன்
காதலனோடு
கைபிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய்
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம்
என்று புறப்பட்ட
காதலனுக்குக் கையசைத்தாய்
என் தோளில்
சாய்ந்தபடி

நன்றி: கவிஞர் அறிவுமதி





கவிஞன்...


காகிதம் தடுக்கிறது எழுத்துக்களின் வலிமை தாளாது 
பேனா தவிக்கிறது சொற்களை பிரசவிக்க 
வாதி பிரதிவாதி ஆனான் கவிஞன்





சொல் காதலியே...!


நீ எப்பொழுது என் மனதிற்குள் 
வந்தாயோ அப்பொழுதே , 
நான் புரிந்து கொண்டேன்........ 
நீ என்னுடன் கலந்தவள் என்று ! 
அப்படியிருக்கையில் 
உன் வார்த்தைகளும்........ 
உன் மௌனங்களும் ......... 
எனக்கு புரியாமல் போய்விடுமா என்ன 
சொல் காதலியே!



Tuesday, August 21, 2018

அக்கா தம்பி உறவு...


தான் விரும்புவதை விட்டுக்  கொடுப்பதும், 
சந்தோஷங்களை சரிபாதியாய் பகிர்வதும், 
செல்ல சண்டைகள், செல்ல குரும்புகள்,
மற்ற உறவுமுன் தன் உறவை 
விட்டுக் கொடுக்காததும் 
இந்த அக்கா தம்பி உறவில் மட்டுமே சாத்தியம்.





Monday, August 20, 2018

உன்னை நினைத்து...


என் அழகு அழகுத் தேவதையே 
உன்னருகே அருகே நான் வருகையிலே 
ஆழ்மனம் உன்னைக் கண்டு துடிக்குதடி 
அவசரமாய் ஏதோ சொல்ல நினைக்குதடி 

தரணியில் பிறந்த தாரகை பெண்ணே 
என்னை தவிக்க விட்டு போகின்றாய் முன்னே 
உலகில் உன்னைப்போல் அழகி இல்லையே 
உண்மையில் இதுவரை யாரும் பிறக்கவில்லையே 

முதல்முறை உன்னைப் பார்த்த நொடி 
முழுவதும் நினைவிற்குள் நிற்குதடி 
இயங்கும் இதயம் ஏனோ ஏங்குதடி 
எப்பொழுதும் உனையது விரும்புமடி 

உன்னை தினம் நினைத்து உருகுகின்றேன் 
என்னுயிரை உனக்கென்று எழுதித் தருகின்றேன் 
காதலை விதைத்து நான் காத்திருக்கின்றேன் 
கடைசிவரை உன்னுடன் வாழ நினைக்கின்றேன்.....



கவிதை புரலுகிறது...!


புத்தகம் கையிலே!
புரலுகிறது...
கவிதை!
உன்னை நினைத்து...




Friday, August 17, 2018

சுமைதாங்கி...!


பெண்கள் ர(ரு)சிக்க என்று நினைக்காதீர்கள் அவளிடமிருக்கும் மனதையும் பாருங்கள்.
உயிருக்குள் உயிரை பெற்றெடுக்கும் உன்னதமான உயிர்  பெண்மை,
சுகத்திற்கும் சுமைக்கும் வித்தியாசம் உள்ளது சுகத்தை விட்டுவிடலாம் சுமையை இறக்கி வைக்கமுடியாது. 
பெண்மை என்றாலே சுமைதாங்கிதான் போலும்.



நான் கனவை தழுவியவள்..


ஒரு சில அழகுசாதன பெட்டகத்தில் 
அடைக்கப்படும்
காட்சி பொருள்!!!

நித்தம் நித்தம் 
விதவை பெண்களின் 
கனவு பொருள்!!!
நான் தாலி கயிறு........



தொலைதூரக் காதல்...!


தொலை தூரம் நீ இருக்க.. 
தொடமுடியாமல் நான் தவிக்க...

ஆழ்கடல் தாண்டி நீ இருக்க.. 
ஆகாயம் அளவு அன்பிருக்க...

கொஞ்சி பேசி இன்பம் போக்க.. 
கோடைகால விடுமுறை இருக்க...

அதுவரை அன்பே!!! 

தொடர்பு கொண்டு பேசி சிரிக்க.. 
தொலைபேசி தானிருக்க...

நித்தம் நித்திரையிருக்க.. 
நிதம் நிதம் கனவுகளில் காதலிக்க...

என் நெஞ்சத்தில் நீ துடிக்க.. 
உன் சுவாசத்தில் நான் கலக்க...

காலம் முழுவதும் கண்னே!!! 
காதல் செய்வோம் கண்மணியே!!!



அம்மா…



பிறக்கும் போது கவிகனாக பிறந்தேன என்று தெரியவில்லை 
ஆனால் பிறக்கும் போது கவிதை கூறி கொண்டு தன பிறந்தேன் 
அம்மா அம்மா... என்று…!!



நீதானே அம்மா


சிறுபிள்ளை தனமாக தவறுகள் செய்தால் ! 
பிறரை போல தண்டிக்காமல் ! 
சரியானதை சொல்லி கண்டித்து ! 
அழுது நடித்தால் ! 
அதையும் மணிபவள் நீதானே அம்மா !!



அம்மா...!


என் அழுகை தொடங்கும் முன்பேய் 
எனக்காய் புன்னகை சுமந்தவள் 
என்றும் சில நேரம் தாமதித்தாலும் 
எனக்காய் பயம் சுமப்பவள் என் அம்மா..



எனக்கென அவன்...!


உன் நெற்றியில் என்னைப் பதிக்கும்தருணம்,
வெற்றிடமாய் வலம் வந்த என் இதயம்,
உன் அன்பை நிரப்பி எனக்குள் சொர்க்கத்தை 
காட்டிவிட்டுச் செல்கிறது, வாழ்வின் இறுதிவரை
உன் உறுதுணை கொண்டே என் வாழ்க்கைப் பயணம்
தொடருமடா...!




அவளதிகாரம்...!


பருவ மலர் என்
பக்கமாய் மணம்
வீச பாவியாக கூனி
குறுகியது என் மனம்,,
அவளை விரும்ப முடியாத ஏக்கத்தில்...!




உன் இதயத்தில்...!


உன் இதயத்தில் ஓர் மூலை...
எனக்கென ஒதுக்கிய அந்நாளை...
மனதில் நினைக்கும் ஒவ்வொரு வேளை...
கனவில் பூக்கும் பல்லாயிற சோலை...
பிறக்கும் இனியதோர் காலை.



Thursday, August 16, 2018

நிலத்தை உழுதேன்..


நிலத்தை உழுது போட்டு 
மனசையும் கல் ஆக்கி 
வெள்ளாமை பண்ண காத்து கிடக்கையிலே 
மழை வருமுன்னு கண்ணை கசக்கி 
கன்னத்தில் கை வைத்து வானத்தை பார்க்கையிலே 
மேகம் திரண்டு கரு வானம் போர்த்தி 
ஒவொரு சொட்டாய் மழை துளி விழுகையில் 
நான் மழை பெய்யும் என அரக்க பறக்க அந்த புழுதி காட்டில் ஓடி திரிகிறேன் 
ஒன்றும் வராமல் ஏமாந்து போகிறேன் 
உழுத நிலத்தை பார்த்து 
அந்த வறண்ட பாலை வானத்தை பார்த்து 
மீண்டும் நடக்கிறேன் புழுதி காட்டில் 
அந்த புழுதி மண்ணில் எங்கோ பேயும் மண் வாசம் நுகர்ந்து 
மீண்டும் மழை வரும் என்ற நம்பிக்கையுடன் 
மீண்டும் ஏர்கலப்பை எடுக்கிறேன் அடுத்த காட்டை உழுவதற்கு ...
மழை எப்பொழுதாவது வரும் என்று ...



நிம்மதியாய் போய்வா..!


எழுந்துவா என்று, எப்போதும் கதற மாட்டோம்...!
ஓடிவா என்று ஒருபோதும் அழுக மாட்டோம்...!
பாரதத்தை கட்டமைத்து சோர்ந்து விட்டீர்...
உயிரை கட்டவிழ்க்க காலனையும் அழைத்து விட்டீர்...!
நீ "விதையாக" முடிவெடுத்த பிறகு, விருட்சத்தின் வளர்ச்சிக்கு தடையாக மாட்டோம்...!
பாரதத்தின் இரத்தினமே..
பண்பின் இலக்கணமே..
தங்க நாற்கரச்சாலை, தந்த உன் கைகள் விண்ணிலிருந்து ஆசீர்வதிக்கட்டும்..!
பொக்ரான் கண்ட பொன்மனமே, உன் எண்ணங்கள் தாமரையாய் மலரட்டும்..!
சமதர்ம வரலாறு சொல்லும்,
சனாதன தர்மமே..
சிலருக்கு மரணம் தண்டனை..
உனக்கு வரம்..!
உன் ஆன்மா பாரத அன்னை மடியில் துயிலும்..!
காலம் உன்னால் தூய அரசியல் பயிலும்..!
போய்வா.. போய்வா..
நிம்மதியாய் போய்வா..!


நீதான் விவசாயி...


கம்யூட்டர் முன்னால் கண்வலிக்க கட்டுகட்டாக பணம் சம்பாதிப்பதை விட! 
கழனியில் கால் வைத்து காலை சூரியனை மேற்கில் வைத்து மாலை காற்றை மனதோடு சுவாசித்து 
உறவுகளோடு நேசம் கொண்டாடும் வாழ்கை அற்புதமானது.
வாருங்கள் படித்துவிட்டு நாளைய மரியாதைக்குரிய 
மனிதன் நீதான் விவசாயி...




விவசாயி...


இயற்கையின் உற்ற தோழன்... 
விளைநிலத்தை முழுமையாய் நேசிக்க தெரிந்தவன்... 
அனைவரின் பசியாற்றும் வள்ளலவன்... 
உழைக்க மட்டுமே தெரிந்த உத்தமன்... 
விதைகளை விளைய வைக்கும் வித்தை தெரிந்தவன்... 
நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பண்பாளன்... 
கடன் வாங்கியேனும் கடமையை செய்பவன்... 
நாட்டின் முதுகெலும்பாக திகழ்பவன்... 
நன்றி எதிர்பாராமல் நன்மை செய்பவன்... 
கண்ணீர் சிந்தினாலும் உழவை தொடர்பவன்...





Tuesday, August 14, 2018

மீசை முடியில்...


அவன்
மீசை முடியில்
கடைசியாய்
ஒட்டிய
மோர் துளியை 
எடுக்கையில்
உதித்ததே
என் உதடு ரேகை...


முத்தம்...!


முகம் முழுக்க குளிர்க்காற்றை அள்ளி தெளிக்கும் ஜன்னலூடே, 
உன் இதழ்ப்பிளவின் வெட்பக்கொழுப்பை மெதுவாய் கரைக்கிறேன்... 
உன் விழி சொட்டும் சிறுதுளியை விழுங்காமல் ஏந்தி நிற்கும் கன்னத்தை, 
பல் படாமல் தின்பதற்கு மட்டும் பழக்கிவிடு...!!!




உலகின் ஒரே ஒரு அழகி!


ஒட்டு மொத்த அழகியே அவளே என்றான் அப்போது!
கடவுளின் ஒன்றிரண்டு தவறானப் படைப்புகளில்
அவள் மட்டுமே என்கிறான் இப்போது!



நினைவோடு நீ...!


நினைவோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் 
மறக்காமல்  நீ இருந்தால் மறு பிறவியும் இருப்பேன் 
உன் அன்புக்காக...!



மகிழ்ச்சியில்...!


மகிழ்ச்சியில் உருக வைப்பதும், 
வலியில் உறைய வைப்பதும்,
அன்பு ஒன்றே...



Monday, August 13, 2018

என் இதயம் உன் அன்பிடம்!!!



நீ என்னை 
செல்லமாய் கட்டி 
அனைத்துக் 
கொள்ளும் போதெலெ்லாம்,
உருகும் பனிமலையாகிறது
என் இதயமும்
உன்னுள் இருக்கும்
என் காதலும்,,
ஆயுள் கைதியாய் 
ஆனதுஎன் இதயம்
உன் அன்பிடம்..!



நினைவலைகள்!!!


ஒவ்வொரு கவிதையாக
எழுதி எழுதி அழிக்கிறேன்,
அழிக்க முடியாத என்னவளின்
நினைவு கவிதையை
என் இதயத்தில் சுமந்தபடி !






முயற்சி...!



விதைக்குள்ளே இருந்துவிட்டால் 
வெளியேறாது ஆலமரம்! 
உனக்குள்ளே இருந்துவிட்டால் 
வீணாகும் உந்தன் திறம்!!... 
திடமான முடிவெடு! 
திறமையுடன் முன்னேறு!! 
கடின உழைப்பை காணிக்கையாக்கு 
வருங்காலம் உன்னோடு!!!! 
வசந்தகாலம் உன் வாழ்க்கையோடு....
முயற்சி செய்.....!!!



வயல்வெளி பேரழகிகள்...


வயல்வெளிகளோடு வாழ்க்கையை தொடங்கி... 
வயல்வெளிகளோடு வாழ்க்கை முடித்துக் கொள்ளும்...  
வயல்வெளி பேரழகி...






Monday, August 6, 2018

மாவீரன் கண்ட மலர்கள்...



" கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின்
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்புநுனை ஏய்ப்ப அரும்பிய விருப்பைச்
செப்பட ரன்ன செங்குழை அகந்தோறு,
இழுதின் அன்ன தீம்புழல் துய்வாய்
உழுதுகாண் துளைய வாகி, ஆர்கழல்பு
ஆலி வானிற் காலொடு பாறித்
துப்பின் அன்ன செங்கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
மத்த நண்ணிய அங்குடிச் சிறூர்"





Source: https://eluthu.com/kavignar-kavithai/99.html